Friday, August 1, 2008

வின்னேறிப் போவோம் ஏரியில் நீராட!


பசடேனா (கலிபோர்னியா): சனியின் துணைக் கோளும், அதன் சந்திரனுமான டைட்டனில் மிகப் பெரிய ஏரிகள் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 1997ம் ஆண்டு காசினி என்ற விண்கலத்தை நாசா விண்ணில் செலுத்தியது. அந்த விண்கலம் கடந்த 2004ம் ஆண்டு சனி கிரகம் அருகே சென்றடைந்தது. சனி கிரகத்தையும் அதன் துணைகோளான (சந்திரன்) டைட்டனையும் அது ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையி்ல் காசினி அனுப்பியுள்ள புதிய படங்களில் டைட்டனில் திரவங்கள் கொண்ட ஏரிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது நாசா விஞ்ஞானிகளை ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து நாசா கூறியிருப்பதாவது: டைட்டனில் மிகப்பெரிய ஏரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் நீர் இருப்பதுபோல தோன்றினாலும் உறுதியாக கூறமுடியவில்லை. நீர் அல்லது ஈத்தேன் போன்ற வேறு ஏதாவது திரவம் போன்ற பொருள் அதில் உள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகிறோம்.

ஒருவேளை அவை வெறும் இருள் சூழ்ந்த பெரும் பள்ளங்களாக இருக்க இருக்கக் கூடும். மீத்தேன், ஈத்தேன், லேசான ஹைட்ரோகார்பன் ஆகியவை அதில் இருக்கலாம்.

இதி்ல் ஒரு ஏரி சுமார் 20,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் விரிந்து கிடக்கிறது என்று

No comments: