Thursday, August 7, 2008

காலம் மாறிடுச்சு கணிணி காலமாச்சு

நல்லா தலைவலி,
பொட்டெல்லாம் தெரிக்குது.
ஆபிஸூல பிராஜெக்ட் கழுதளவு!
லீவுபொபோட முடியாது.
இன்னும் தூங்கல பொழுதுவிடிஞ்சிருமெ!
டாட்டரை கின்டெர்கார்டெனில் போய்விடனும்.
அவள் அடுத்த ரூமில அசந்து தூங்குறா!
பிள்ளைய காலைலெ ஸ்கூலுக்கு விடச்சொன்னா-
இங்லீசுல காச்,மூச்னு கத்துவா!
ஐயம் ஆல்சோ வொர்க்கிங் ஐயம் நாட் ப்ரீ-
ஐ ஹவ் டு டூ லாட் ஆப் வொர்க் ரைட்னு கத்துவாள்!
என்ன செய்ய எல்லாம் தலைவிதி!
டைலனால் ரெண்டு போடுவோமா?
(மனதினில் மவுனமாய் சிந்தனை-
சட்டென்று பொட்டில் உதிதத்தது அம்மாவின் யோசனை).
இந்னேரம் அம்மாவ இருந்தா பச்சிலை பத்து போட்டு நெற்றியில் நீவிவிடிருப்பாள்.
போனதீபாவளிக்கு பத்து நிமிடம் பேசியது.
அம்மாவிடம் உடனே பேசினான்.
அவள் கனிவு,விசாரனை......அம்மானா,அம்மாதான்-
அம்மான்னாஅன்புதான்.
தலைவலி சற்று நீங்கியதை உணர்ந்தவனாக,
(மறுபடியும் உறங்க சென்று நன்று உறங்கிபோனான்- பொறியில் மாட்டிய கணினிபொறியாளன்).
---தபால் காரன்

No comments: