Monday, August 4, 2008

பாட்டியும் அவள் சொன்ன கதைகளும்.

நேற்று நண்பர்களுடன் குசாலம் படம் பார்த்தேன் !
கதை? ஆ... ஊ... சூப்பர்! யென்றனர்...
பரவாயில்லை ரகமே!.
சென்ற மாதம் தசாஅவதாரம் கதையில்லை நல்ல கலை நேர்த்தி!
தி டார்க் நைட் ஆங்கிலப்படம்-பிரம்மாண்ட பொழுது போக்கு!
ஹாரிப்பாட்டர் நம்ப முடியாத சாகாச சித்திரம்.
பல மொழிப்படம் ,பல நாட்டுப்படம் -
பார்த்ததும்,படித்ததும்,கதை கேட்டதும்...
இன்னும் என் ஜீவனில் ஓடிக்கொண்டிருக்கும்...
அதீத கற்பனை யற்ற !திரை வடிவம்,எழுத்துவடிவம் பெறாத..
காலம் கடந்தும்,கண் கொட்ட இரவில் விழித்திருக்கச் செய்ததும்!
என்னை பல நேரம் தாலாட்டுக்கு பதில் கேட்டுக்கொண்டே தூங்க வைத்ததும்!
நான் என்னுள் திருப்பி,திருப்பி அசைப்போட்ட....
பாட்டி சொன்னக் கதைகளே!!!
என்றும் என்னை கவர்கிறது.
பாவம் இக்கால பிள்ளைகள் பாட்டி கதைகளும் இல்லை,
கதை சொல்லக்கூடிய பாட்டிகளும் வீட்டில் இல்லை!
எல்லாப்பாட்டிகளும் முதியோர் இல்லத்தில்!.
----தபால் காரன்.

No comments: