Tuesday, August 12, 2008

கட்சத்தீவு

கட்சத்தீவு,
சாவை ருசி பார்க்கும் நாவு!
தினமும் மனித உயிரின் காவு.
அன்று இட்ட தானம்-
இன்றொ நமக்கே ஈனம்.
எல்லைகள் பறி மாற்றம்,
இன்றோ எல்லையில்லாத் தொல்லை.
நம்மவருக்கு அங்கே உரிமை இல்லை .
நித்தம்,சகோதரர்களின் ரத்தம் கலந்து-
செங்கடலாய்...
என்று ஓயும் சோக அலை!என்று வீசும் நல் மென் காற்று!
என்று ஓடும் வாழ்கை ஓடம்.
காலம் பதில் சொல்லுமா?
இல்லை கவலை தொடருமா?
---தபால் காரன்

No comments: