Thursday, August 7, 2008

ஆசிரி(றி)யன்

சீரிய பணி ஆசிரியர் பணி!
கற்றவரே காமுறுவர்!
சில கற்றவர் காமமுறும் அவலம்.
பள்ளி பாடம் சொல்லிக்கொடுவென்றால்,
பள்ளியறை பாடம் சொல்லும் காமுகனாய்.
கல்வி முறையைகலவி முறையாக்கும் கயவனாய்!
சாதி,மதம் பதிவுசெய்து கல்வியில் இடம் கொடுத்தாய்!
பின் பால்ய பெண்சாதிபிள்ளைகளை,
உன் பெண்சாதியாய் ஏன்டா பாவித்தாய்.?
மகரந்தச் சேர்க்கை பாடம் செல்லாமல்-
அந்த மலர்(தளிர்)களுடன் சேர்க்கை செய்தாய்.
மாணக்கர் தவறு செய்தால் இருக்கையின் மேல் ஏற்றி தண்டனை தருவாய்!
உன் தவறுகளை தண்டிக்க உன்னை தூக்கு மரம் ஏற்றலாமே?
நீ வாழ்கைப் புத்தகத்தில்அச்சுப்பிழை,
பிழைத்திருத்திகொள்,இல்லையெனில் திருத்தப்படுவாய்.
-----தபால் காரன்.

No comments: