Wednesday, August 13, 2008

அமெரிக்கா விரைகிறார் மன் மோகன் சிங் (சும்மா ஒரு விளையாட்டுக்கு)

இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் மட்டுமே கிடைத்ததால் எதிரி(எதிர்)கட்சிகள் மன் மோகன் சிங்கை ஆட்சியை விட்டு இறங்கும் படி கோரி,நாடு முழுதும் பந்தில் ஈடுபட்டது.அனைவரும் மாயாவதியின் தலைமையில் மன் மோகன் சிங் வீட்டை முற்றுகையிடப் போவதாக,காரத்தெரிவித்தார்.இதில் தமிழ் நாட்டிலிருந்து சரத்குமாரும் அவருடைய ஒரே நம்பிக்கைத்தொண்டர் ராதிகா சரத்குமாரும் கலந்து கொளாவார்கள் என மக்கள் சமத்துவ கட்சி அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது.பா.ஜ தலைவரில் முக்கியமானவரும் வருங்கால பிரதம வேட்பாளருமானஅத்வானி . இது இந்தியாவிற்கே அவமானமாக உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தால் அனு ஒப்பந்தம் போடும் போதே அமெரிக்கா வாங்கும் பதக்கத்தில்40% வீதம் இந்தியாவுக்கும் தரனும்னும் கேட்டிருப்போம் .அதற்கு அவர்க ள் ஒத்து வரலேன்னாலும் கால்ல விழுந்தாவது சம்மதிக்க வைத்திருப்போம்.இப்ப நாங்க கேட்பது பிரதமர் உடனடியாக அமெரிக்கா போய் தங்க பறிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்துப்போட்டு வந்தால் தான் பாராளு மன்றத்தை நடத்த விடுவோம்.அவ்வாறு இல்லையென்றால் நாளை மாயாவதி தலைமையில் மன் மோகன் வீட்டை முற்றுகை விடுவோம்.(அப்ப கூடி யிருந்த செய்தியாளரில் ஒருவர்)மாயாவதி உங்க அரசியல் எதிரி எப்படி அவருடைய தலைமையில் போராட ஒத்துக்கொண்டீர்கள்?இது மட்டும் தான் உங்களுக்குத்தெரியும்!மாயாவதிக்கு துணி துவைப்பது,சமையல் பண்ணுவதெல்லாம் இப்ப நான் தான். நாளை கூட மறியல் நடந்தால் மாயாவதிக்கு குடை பிடிக்கிறதுதான் என் வேலை.இதெல்லாம் செய்ய வேண்டிய அவசியம்? நான் அடுத்த பிரதமரா ஆகனும்ல!அப்ப மாயாவதி எப்படியும் நான் தான் அடுத்த பிரதமர்ன்னு சொல்றாரே?(எதுக்கு வம்புன்னு அத்வானி வேகமா காருக்குள் நுழைந்து கதவ மூட கார் வேகமா போ கிறது!(மாயாவதி வீட்டுக்கு?) அடுத்து செய்தியாளர்களெல்லாம் மன் மோகன் வீட்டுக்கு ப்போனா அவரு அங்கில்ல சோனியாவ சந்திக்க போய் உள்ளதா சொல்லப்பட உடனே செய்தியாளர்கள் சோனியா வீட்ட அடைகிறார்கள்.பிரதமர் அவசரமா அங்க கூடியிருந்த செய்தியாளர்கள் மத்தியில் சொல்றார் பிளீஸ் நோ கொஸ்டின்ஸ் டைமில்லசட்டை ,கோட் சூட்டெல்லாம் மடிச்சி வைக்கனும் அவசரமா அமெரிக்கா புறப்படுறேன்.மக்கள் உணர்வ மதிச்சி சோனியா இந்த முடிவ எடுத்திருக்காங்க இதனால நம் நாட்டுக்கு பெரும் புகழ் தேடி வரப்போகுது,எல்லாரும் இந்த ஒப்பந்தம் பாஸாகனும் கடவுள வேண்டுக்குங்க (சொல்லிவிட்டு விறுவிறுன்னு சோனியா வீட்டுக்குள் நுழைந்து ஒளிந்து கொண்டார்??? ).
----தபால் காரன்.

1 comment:

Anonymous said...

தபால் காரரே ரொம்ப நக்கல்தான் போங்க. நன்றாக உள்ளது.