Thursday, August 14, 2008

டாலர் கணவும் ஆகஸ்ட்15ம்!

(அன்னிய தேசத்தில் ஒரு சகோதரரின் கண்ணீர் மடல்)
ஓட்டமும் நடையுமாக,
வேகமும் விறுவிறுப்புமாக!
தூக்கத்தை மிச்சம் வைத்து.
முதல் நாள் தூக்கத்தை மறுநாள் தொடரும் கண்கள்!
குளிரை மறைக்க ஒல்லி உடம்பை குண்டாக்கும் சாகசம்!
ஒரு நாள்-ஒரு வேலை உணவு!
மூன்று மிடர் தேணீர் விழுங்கள்!
கூட்ட நெருசலில் பஸ்ஸிலோ இரைலிலோ-
மாறி மாறி செல்லும் அவஸ்தை!
அப்பாடா...வந்து விட்டோம் வேலைக்கு...!
என பெருமூச்சு விடும் கணத்தில்...
சம்ளத்தை கூட்டியோ அல்லது -
முன் சம்பளத்தையோ கேட்டு விடக்கூடாது என்பதற்காக,
திட்டிதீர்க்கும் முதலாளி,சூப்பர் வைசர்!
இன்னும் யாருக்கொள்ளாம் பயப்படக்கூடாது என்ற வெவஸ்த்தையே இல்லாமல்
"இவன் அவனா இருப்பானோ?" என்ற திகில்!
வேலை முடித்து நொந்து நூலாகி...
நடமாடும் பிணமாக அறை வந்து சேர்ந்து-
மறுநாள் விழிப்பதற்காக உறங்கி....
அப்பப்பா.....!சொல்லி முடியாது!
சம்பளமோ வரி-இன்ஸுரன்ஸ் என்று எடுத்துக்கொண்டு தருகையில்...
என் நாட்டின் சுதந்திரத்திற்காக ,
எம் முன்னோர்விட்ட குருதியும்,
மூச்சும் வீணாய் போய்விட்டதே...!
என்கிற நினைப்பைத்தவிர வேரொன்றும் செய்வதற்கில்லை....!
Written by:abu zulaiha,
www.adirai post.blogspot.com

No comments: