(அன்னிய தேசத்தில் ஒரு சகோதரரின் கண்ணீர் மடல்)
ஓட்டமும் நடையுமாக,
வேகமும் விறுவிறுப்புமாக!
தூக்கத்தை மிச்சம் வைத்து.
முதல் நாள் தூக்கத்தை மறுநாள் தொடரும் கண்கள்!
குளிரை மறைக்க ஒல்லி உடம்பை குண்டாக்கும் சாகசம்!
ஒரு நாள்-ஒரு வேலை உணவு!
மூன்று மிடர் தேணீர் விழுங்கள்!
கூட்ட நெருசலில் பஸ்ஸிலோ இரைலிலோ-
மாறி மாறி செல்லும் அவஸ்தை!
அப்பாடா...வந்து விட்டோம் வேலைக்கு...!
என பெருமூச்சு விடும் கணத்தில்...
சம்ளத்தை கூட்டியோ அல்லது -
முன் சம்பளத்தையோ கேட்டு விடக்கூடாது என்பதற்காக,
திட்டிதீர்க்கும் முதலாளி,சூப்பர் வைசர்!
இன்னும் யாருக்கொள்ளாம் பயப்படக்கூடாது என்ற வெவஸ்த்தையே இல்லாமல்
"இவன் அவனா இருப்பானோ?" என்ற திகில்!
வேலை முடித்து நொந்து நூலாகி...
நடமாடும் பிணமாக அறை வந்து சேர்ந்து-
மறுநாள் விழிப்பதற்காக உறங்கி....
அப்பப்பா.....!சொல்லி முடியாது!
சம்பளமோ வரி-இன்ஸுரன்ஸ் என்று எடுத்துக்கொண்டு தருகையில்...
என் நாட்டின் சுதந்திரத்திற்காக ,
எம் முன்னோர்விட்ட குருதியும்,
மூச்சும் வீணாய் போய்விட்டதே...!
என்கிற நினைப்பைத்தவிர வேரொன்றும் செய்வதற்கில்லை....!
Written by:abu zulaiha,
www.adirai post.blogspot.com
Thursday, August 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment