Thursday, August 7, 2008

கைம் பெண்

குற்றமேசெய்யாமல்,காலத்தின் முழு ஆயுள் கைதி.
இறந்தவனுக்காக செத்து,செத்து வாழ்பவள்.
வண்ணம் இழந்த வெள்ளை மலர்.
இதயத்தில் முள்தாங்கிய வெள்ளை ரோசா.
கால் கட்டு(திருமணம்) அவிழ்ந்தும் சுதந்திரமாய் நடக்க முடியாதவள்.
இன்பத்தின் தூற்றல்.
சோகத்தின் வறட்டு சிரிப்பு.
கணவுகளின் பெரும் மூச்சு.
நிசத்தின் ஏக்கம்.
மகிழ்சியின் துக்கம்!
வாழ்வின் சாபம்.
ஆரோக்கியத்தின் முடம்.
அவசியத்தின் புறக்கனிப்பு.
தேவையின் பற்றாக்குறை
என்று தீறும் இந்த கொடுமைகள்?
அன்றே-
மாதம் மும்மாரி பொழியும்.
---தபால் காரன்

No comments: