Thursday, July 31, 2008

நவீன கேமிராவும்காம நாய்களின் பார்வையும்

சில நேரங்களில் சிலரின் ரசனை எவ்வளவு கீழ்த்தரமாக மாறுகிறது.சமீபத்தில் என்னுடன் பணி புரியும் இரு மலையாளிகள் ஒரு வீடியோ கிளிப்-ஐ ப்ளூ டூத் -ல் தங்களுக்கு பரிமாரிக் கொண்டிருந்தனர், நினைப்பதற்கே அருவருப்பாக உள்ள ஒன்று அந்த கிளிப்பில் இருந்தது, இன்று சாதரணமாக பெரும்பாலான இளைஞர்களால் விரும்பிப் பார்க்கப்படும் ப்ளூ fபில்ம் இல்லை அது.பெண்களின் அங்கங்களை பல கோணங்களில் படம் எடுத்துக் கொண்டிருக்கும் கேமராக்கள் கழிவறை வரை சென்றிருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.அது ஏதோ ஒரு ஹாஸ்பிடல்லாகத்தான் இருக்கவேண்டும். ஒரு மிருகம் பெண்களின் கழிவறையின் மேல் பகுதியில் கேமராவைப் பொருத்திவிட்டுச் சென்று விட்டது அதில் அன்று இயற்கைத்தேவையைப் பூர்த்தி செய்ய வந்த அனைவரும் (அந்த கேமராவில்) படம் பிடிக்கப்பட்டு விட்டனர் அவை இன்று சர்வ சாதரணமாக ப்ளூ டூத்தில் பரிமாரப்பட்டுக் கொண்டிருக்கிறது.எது எதெற்க்கெல்லாம் பெண்கள் பயப்பட வேண்டியிருக்கிறது இனி பொதுக் கழிவரையை பெண்கள் பயன்படுத்த வேண்டுமென்றால் அவர்கள் அதை முழுவதுமாக சோதனை செய்து விட்டுத்தான் பயன் படுத்த வேண்டும் போலிருக்கிறது. என்ன ஒரு கொடுமை.என்னதான் நாம் விஞ்ஞானத்தில் முன்னேறி விட்டதாக மார்தட்டிக் கொண்டாலும் பெண்களை இன்றும் போகப் பொருளாகத்தான் உலகம் பார்க்கிறது என்பதற்கு இவையெல்லாம் உதாரணம் இல்லாமல் வேறென்ன.இது பெண் இனத்தை நோக்கித் தொடுக்கப்பட்டிருக்கும் பலமான தாக்குதல், நல்ல மனம் உள்ள யாரலும் சகித்துக் கொள்ள முடியாத ஒரு அவமானகரமான வரலாற்றுக் கருப்புப் புள்ளி.
நன்றி:www.adiraipost.blogspot.com
Posted by:www.crownthasthageer.blogspot.com( அரிச்சுவடி)

No comments: