Thursday, July 31, 2008

நடிகனடா நான் நடிகனடா

நடிகனடா நான் நடிகனடா-வேசம் போடும் நடிகனடா
கோசம் போட ஒரு கோடி மூடனுண்டு!
பாசம் காட்ட பல கோடிபக்தனுண்டு!
வேசம் கலஞ்சாலும்,
மோசம் செஞ்சாலும் ஏன் என்று எதிர்க்க ஆளுமில்ல!
என கடவுளா மதிப்பான்,உயிரையும் கொடுப்பான் தமிழன்!
நான் ஒருதவ சொன்னா- நூறு தடவ குட்டிகரணம் போடுவான்!
சாமியே சரணம் ரஜினியே காரணம் என்று பாடுவான்!
தமிழணும் ,தமிழணும் எனக்காய் மோதுவான்!
தலைவா,தலைவா என தினமும் பாடுவான்.
சோத்துக்கு தினம் போராடுவான்!
என் படத்துக்கு தினம் மாலைப்போடுவான்!
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணினால் கேட்க யாருமில்ல!
பிறந்த மண்ணுக்கு அள்ளி கொடுக்க தடுக்க யாருமில்ல!
சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா-
சின்ன குழந்தையும் சொல்லும்!
நடிகனடா தமிழ் நாட்டுக்கு கர்னாடக நடிகனடா!

-------தபால் காரன்.

1 comment:

ROYAL SON 4 said...

கை கொடுங்க தலைவா!இவ்ளோ நாளா யார்,யாரையோ தலைவன்னு சொல்லி ச்சேஅத விடுங்க தலைவா!தமிழன் ஏமாளி.வந்தாரை வாழ வைப்பான்,தமிழனை தமிழன் வைய்வான். நல்ல கருத்த சொன்னீங்க- ம் எங் நம்ம சனம் திருந்த போது?
sankar-trichy now in u.s.a