Sunday, July 20, 2008

ஒரு தபால்காரனின் புலம்பல் (கவிதை)

காதல் கடுதாசி வரும் காலம் மலையேறிப்போச்சி!
காதல் தூதுவன் எனும் பட்டம் மாறிப்போச்சி!
கம்(பி)யூட்டர் வந்த பின்னே-
சைபர் கேப் வந்துடுச்சி!
சைபர் கிரைம்மும் வந்துடிச்சி.
ஒருகாலத்துல,கால் கடுக்க கதவருகே,
காத்திருந்தவங்கயெல்லாம் காணாபோய்ட்டாங்க!
நல்ல சேதி பட்டனத்துல பையனிடமிருந்து வந்தா பணம்,
பொண்னுக்கு குழந்த பெத்த சேதி வந்தா பணம்,
வேலுவுக்கும்,சோமுவுக்கும் வேல ஆர்டர் வந்தா பணம்.
எல்லாம் மாறிப்போச்சு,பொழப்பு நாறிப்போச்சு.
செல்லுப்போனும்,கம்(பி)யூட்டரும் வந்த பின்.
என் உத்யோகப்பொழப்பு எவ்ளோ காலம்?
----தபால்காரன்.

No comments: